கும்பகோணத்தில் கோலாகலம்: அட்சய திருதியையொட்டி 12 பெருமாள் கருட சேவை!

கும்பகோணத்தில் புகழ்பெற்ற 12 பெருமாள் கருட சேவை இன்று அட்சய திருதியையையொட்டி மிகச் சிறப்பாக நடைபெற்றது. ஆண்டுதோறும் சித்திரை மாத வளர்பிறையில் வரும் அட்சய திருதியையன்று, கும்பகோணத்தின் முக்கிய 12 வைணவத் தலங்களின் பெருமாள்களும் ஒரே இடத்தில் கருட வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பது வழக்கமாகும்.

ஒரே பந்தலில் 12 பெருமாள்கள்

நடப்பாண்டு விழாவையொட்டி, கும்பகோணம் டி.எஸ்.ஆர். பெரிய தெருவில் பிரம்மாண்டமான அலங்கார பந்தல் அமைக்கப்பட்டிருந்தது. அங்கு பின்வரும் முக்கிய கோயில்களின் உற்சவப் பெருமாள்கள் கருட வாகனங்களில் எழுந்தருளினர்:

  • சாரங்கபாணி சுவாமி
  • சக்கரபாணி சுவாமி
  • ராமசுவாமி
  • ஆதிவராக சுவாமி
  • ராஜகோபால சுவாமி
  • கொட்டையூர் நவநீத கிருஷ்ணசுவாமி
  • மேலக்காவேரி வரதராஜ பெருமாள்
  • அகோபிலமடம் லட்சுமி நரசிம்மர்
  • பாட்சாரியார் தெரு கிருஷ்ண சுவாமி
  • வெங்கட்ராயர் அக்ரகாரம் பட்டாபிராம சுவாமி
  • சோலையப்ப முதலியார் அக்ரகாரம் ராம சுவாமி
  • மல்லுகச்செட்டித்தெரு சந்தான கோபாலகிருஷ்ண சுவாமி
  • புளியஞ்சேரி வேணுகோபால் சுவாமி
  • கொட்டையூர் நவநீத கிருஷ்ண சுவாமி
  • ப்ரம்மன்கோயில் வேதநாராயண பெருமாள்
  • ப்ரம்மன்கோயில் வரதராஜ பெருமாள்
  • தோப்பு தெரு ராஜகோபால சுவாமி

ஆழ்வார்களின் மங்களாசாசனம்

பெருமாள்களுக்கு எதிரே ஆஞ்சநேயர் எழுந்தருள, திருமங்கையாழ்வார், நம்மாழ்வார், மற்றும் திருமழிசையாழ்வார் ஆகியோரும் அங்கு எழுந்தருளினர். இன்று காலை முதல் மதியம் 1 மணி வரை அலங்கார பந்தலில் வீற்றிருந்த பெருமாள்களைத் தரிசிக்க பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டனர்.

சிறப்பு ஏற்பாடுகள்

“பன்னிரு பெருமாள்களையும் ஒரே இடத்தில், ஒரே நேரத்தில் கருட வாகனத்தில் தரிசிப்பது மிகவும் புண்ணியமானது மற்றும் விசேஷமானது” என பக்தர்கள் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.

இந்த விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் கும்பகோணம் காசிக்கடை தர்ம வர்த்தகர்கள் சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் மிகச் சிறப்பாகச் செய்திருந்தனர். விழா நடைபெற்ற பெரிய கடைத்தெரு பகுதி முழுவதும் பக்தர்களின் கூட்டத்தால் களைகட்டியது.

error: Content is protected !!